வியாழன், பிப்ரவரி 18, 2010

நேரு (நினைவு) கல்லூரி நினைவுகள்


        ஆயிற்று. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள். கல்லூரி நாட்களில்,நண்பர்களாய் துள்ளித்திரிந்த நாம், இன்று உலகின் ஏதேதோ மூலைகளில் குடும்பத்துடனோ, தனியாகவோ வசித்துவருகிறோம். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, தொழில் நுட்ப அறிவையும் வளர்த்துக்கொண்டு, ரிசசனையும் சமாளித்துக்கொண்டு, .....என்ன வாழ்க்கை இது...

சரி, மொக்கை போட்டது போதும். விஷயத்திற்கு வருகிறேன்.

போன வருஷம் என் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது, என் மச்சான் குணசேகர் என்னிடம் சில காகிதங்களைக் கொடுத்தான். அட, அது நாம் கல்லூரி படிப்பின் கடைசி வருடம் தயாரித்த ஆட்டோகிராஃப். ஒவ்வொருவருக்கும், பட்டப்பெயர் மற்றும் பஞ்ச் டயலாக் (பெரும்பாலும் ‘பங்க்ஸ்’ஸால் எழுதப்பட்டது) எல்லாம் கொடுத்து, படிக்க தமாஷாக இருந்தது.

என்னுடைய இந்த இணையத்தளத்தில், தினம் ஒரு நண்பரின் ஆட்டோகிராஃப் பக்கத்தை பதிவேற்றம் செய்யலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாய், ஆட்டோகிராஃபின் முதல் பக்கத்தை கீழே இணைத்துள்ளேன்.

                               (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

படித்துவிட்டு, பின்னூட்டம் (Feedback) இடுங்கள் நண்பர்களே.

இந்த ஆட்டோகிராஃப் தயாரிப்பில், பெரும் பங்கு வகித்த B.செந்தில் குமார் (பங்காரு) முதல் ஆளாய் நாளை இடம் பிடிக்க இருக்கிறார்.

1 கருத்து: